02 July 2009

இறை வழி மருத்துவம்

நமக்குள் இருக்கும் இறை சக்தியை, இம்மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர், அவரிடம் உள்ள சக்தியால் தூண்டி விட்டு செயல் பட வைத்து, வியாதிகளை குணப்படுத்துவதே இறை வழி மருத்துவம் ஆகும்.

எனது தந்தை பல்வலியால் துடித்துகொண்டிருந்தபோது , தற்செயலாக மருத்துவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எந்த வித மருந்தும் இல்லாமல் முற்றிலும் இறை வழிபாட்டின் மூலம் மட்டுமே குணப்படுத்தினார்.

நான் இரு சக்கர வாகனத்தில் சிறிய விபத்தை சந்திக்க நேர்ந்து. முழங்காலில் அடிபட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு சென்றேன். Screw செய்து வைத்தியம் செய்ய வேண்டும் என கூறினார்கள். இயலாத பட்சத்தில் கட்டு கட்டி இரண்டு மாத காலம் ஒய்வு எடுக்க வேண்டும் என கூறினர்.

நானும் screw செய்ய வேண்டாம். இரண்டு மாத காலம் ஒய்வு எடுக்க தயார் எனக் கூறி, கட்டு கட்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.
மூன்றாம் நாள் மருத்துவர் தமிழவேள் அவர்கள் எனது இல்லத்திற்கு வந்தார். கட்டுகள் முழுவதையும் அகற்றி விட்டார். கட்டு எதுவும் போடவேண்டாம் எனவும், அதே இரண்டு மாத காலத்தில் இறை மருத்துவம் மூலம் முற்றிலும் குணம் ஆகிவிடும் எனவும் கூறினார். அவ்விதமே கட்டு எதுவும் இல்லாமல் வழிபாட்டாலும் மற்றும் சில சித்த மருந்துகளாலும் எனது கால் சரியானது.

எனது அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

மருத்துவர் தொடர்புக்கு:
டாக்டர் என்.தமிழவேள் (Dr.N.Thamizhavel)
இறை வழி சித்த மருத்துவர் (Siddha Healer)
பதாஞ்சலி ஹெல்த் சென்டெர் (PATHANJALI HEALTH CENTRE)
3/7, செந்தமிழ் நகர், வேளச்சேரி மெயின் ரோட், மேடவாக்கம், சென்னை - 600100.
கைபேசி : (mobile) : 9345812080

No comments:

Post a Comment